சத்தியம் மட்டும் பேசு,
சத்தியத்திற்காகப்பேசு,
நீதியின் பக்கம் நில்;
நீ தனித்துப் போனாலும் சரியே.
அநியாயம்
அரிச்சந்திரன் செய்தாலும்
நியாயமாகாது.
சத்தியம் ஜெயிக்கும்
காலம் தாமதித்தாலும் சரியே.
அநியாயம், அக்கிரமம்,
ஆண்டவன் விரும்பாதது.
இரு முகம்
நயவஞ்சகனுக்குரியது
உனக்குரியது அல்ல.
உன்னைச் சாறு பிழியும் வரை
உன்னிடம் உரசும்
உறவின்/ நட்பின் பெயரில்
இரு முகம் காட்டும்
மிருகங்களை விட்டும்
தூர விலகு.
கூட இருந்து குழி பறிக்கும்
நயவஞ்சகர்களுடன்
வாழ்வதை விட
நாலு கால் மிருகங்களுடன்
வாழ்வது மேல்.
No comments:
Post a Comment