சத்தியத்தின் பாதை
அநியாயத்திற்கும், அசத்தியத்திற்கும்
ஆதரவளிக்கும்
அல்லது-
அவைகளை
அலட்டிக் கொள்ளாது அங்கீகரிக்கும்
அற்பர்கள் இருக்கும் வரை;
சத்தியத்தின் பாதை
கரடு முரடான
முட்கள் நிறைந்த
நெடும் பாதையாகவே இருக்கும்.
நீ தனித்திருப்பாய்
சத்தியம் உன் கல்பிலிருக்கும்
அசத்தியம் விலகிருக்கும்
விரோதிகளின் கல்பிலிருக்கும்
சத்தியத்திற்கு சாவு கிடையாது
உலகே உன்னை குறை சொன்னாலும் கூட
No comments:
Post a Comment