Tuesday, October 21, 2014

சத்தியத்தின் பாதை

அநியாயத்திற்கும், அசத்தியத்திற்கும்
ஆதரவளிக்கும்
அல்லது-
அவைகளை
அலட்டிக் கொள்ளாது அங்கீகரிக்கும்
அற்பர்கள் இருக்கும் வரை;

சத்தியத்தின் பாதை
கரடு முரடான
முட்கள் நிறைந்த
நெடும் பாதையாகவே இருக்கும்.

நீ தனித்திருப்பாய்
சத்தியம் உன் கல்பிலிருக்கும்
அசத்தியம் விலகிருக்கும்
விரோதிகளின் கல்பிலிருக்கும்

சத்தியத்திற்கு சாவு கிடையாது
உலகே உன்னை குறை சொன்னாலும் கூட

No comments:

Post a Comment