Monday, August 4, 2014

காதல்!

உறவுகளை உடைத்து,
உணர்வுகளை தகர்த்து,
உடமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்,
காதல்!
-யாரோ 



பதில் கவிதை 

உறவு
உறவுகளை அரவணைத்து
உணர்வுகளை மதித்து
உடமைகளை பாதுகாத்து
உண்மைகளை ஏற்று
உலகை விழிப்புடன்
சவாலாக தாங்கும்
உறவு தான் ஜெயிக்கும்!
-என் கருத்து, நான் ஏற்ற கருத்து

No comments:

Post a Comment